தமிழ்ப்பசி - 8 ஆம் வகுப்பு சமச்சீர்

பொன்னின் குவை எனக்கு வேண்டியதில்லை-என்னை
போற்றும் புகழ் எனக்கு வேண்டியதில்லை 
மன்னன் முடிஎனக்கு வேண்டியதில்லை-அந்த
மாறன் அழகு எனக்கு வேண்டியதில்லை 
கன்னி தமிழ் எனக்கு வேணுமேயடா-உயிர்க்
கம்பன் கவி எனக்கு வேணுமேயடா ! 
நூல்கள் கனித்தமிழில் அள்ளிட வேண்டும் - அதை 
நோக்கித் தமிழ்ப்பசியும்  ஆறிட வேண்டும் 

சொற்பொருள்:
  • குவை - குவியல்
  • மாரன் - மன்மதன்
ஆசிரியர் குறிப்பு:
  • இயற்பெயர் - க.சச்சிதானந்தன்
  • ஊர் - இலங்கையில் யாழ்ப்பாண   மாவட்ட பருத்தித்துறை
  • பணி - ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் விரிவுரையாளர் பணி
  • புலமை - தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளில் புலமை.
  • படைப்புகள் - ஆனந்தத்தேன்(கவிதைத்தொகுதி - 1954), அன்னபூரணி (புதினம்), யாழ்பாணக்காவியம்
  • சிறப்பு - மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியின் மாணவர். இவர் தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும், பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.

No comments:

Post a Comment

இன்பத்தமிழ் - Class 6 Tamil New Syllabus Term 1

தமிழ் வணக்கம்   தற்கால இலக்கிய மரபாகிவிட்டது  பாரதிதாசனின் இயற்பெயர்   சுப்புரத்தினம்.  பாரதியாரின் கவிைதகள்  மீது கொண்ட  பற்றின் காரணமா...